• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஜோர்டான் பயணத்தில் உலக கவனம் ஈர்த்த விசேஷ தருணம்

athibantv by athibantv
டிசம்பர் 18, 2025
in Bharat
A A
0
👁️ 4K 🔥

ஜோர்டான் பயணத்தில் உலக கவனம் ஈர்த்த விசேஷ தருணம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான் அரசுமுறைப் பயணத்தின் போது, அந்நாட்டு பட்டத்து இளவரசர் இரண்டாம் அப்துல்லா, பிரதமருக்காகத் தானே வாகனம் ஓட்டி அழைத்துச் சென்ற சம்பவம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய செய்தி தொகுப்பை இப்போது காணலாம்.

இந்தியா – ஜோர்டான் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி ஜோர்டானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். தலைநகர் அம்மானை அடைந்த அவருக்கு, ஜோர்டான் பிரதமர் ஜாஃபர் ஹசன் தலைமையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜோர்டான் பட்டத்து இளவரசரான இரண்டாம் அப்துல்லா, பிரதமர் மோடியை தனது சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தைச் சுற்றிக் காட்டினார்.

பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி, 1994 ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று ஜோர்டான் தலைநகர் அம்மானில் பிறந்தவர். 1921 ஆம் ஆண்டு முதல் ஜோர்டானை ஆட்சி செய்து வரும் ஹாஷிமைட் அரச வம்சத்தைச் சேர்ந்த இவர், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கும், ராணி ரானியாவுக்கும் பிறந்த மூத்த மகன் ஆவார். இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர்.

தமது கல்வியை ஜோர்டானிலேயே தொடங்கிய ஹுசைன், 2012 ஆம் ஆண்டு கிங்ஸ் அகாடமியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், 2016 ஆம் ஆண்டு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் பட்டம் பெற்றார். அதன்பின், 2017 ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள சாண்ட்ஹர்ஸ்ட் ராயல் ராணுவ அகாடமியில் ராணுவப் பயிற்சியை நிறைவு செய்தார். தற்போது அவர் ஜோர்டானிய ஆயுதப்படைகளில் மேஜர் பதவியில் பணியாற்றி வருகிறார். 2023 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, இளவரசி ராஜ்வா அல்-சயீஃபைத் திருமணம் செய்துகொண்டார்.

RelatedPosts

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

2009 ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று வெளியிடப்பட்ட அரசாணை மூலம், ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி ஜோர்டானின் பட்டத்து இளவரசராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அரசுப் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறார். பட்டத்து இளவரசர் என்ற முறையில், மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் இணைந்து பல்வேறு அரசு மற்றும் ராணுவப் பயணங்களில் பங்கேற்றுள்ள அவர், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், ஐநா காலநிலை மாநாடு, உலக பொருளாதார மன்றம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச மாநாடுகளில் ஜோர்டானைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தனது 20வது வயதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமர்வைத் தலைமையேற்ற உலகின் இளைய நபர் என்ற பெருமையையும் ஹுசைன் பெற்றார். தற்போது, கிரௌன் பிரின்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் அவர், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மனிதாபிமான உதவிகள் மற்றும் இளைஞர் நலன் தொடர்பான பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அவரது முயற்சியின் விளைவாக, 2018 ஆம் ஆண்டு ஜோர்டானின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் சூழலில் ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, பட்டத்து இளவரசர் ஹுசைன் நேரில் வரவேற்று உபசரித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த நிகழ்வு இந்தியாவிற்கு ஜோர்டான் மக்கள் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: Bharat
Previous Post

மதுரோ ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவின் கடும் அழுத்தம் – பதற்றம் உச்சம்

Next Post

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழா – புதுக்கோட்டையில் இடம் தேர்வு

RelatedPosts

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026
புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

மார்ச் 20, 2026
Next Post
Home

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழா – புதுக்கோட்டையில் இடம் தேர்வு

Home

சபரிமலை ரயில் இணைப்பு குறித்து ரயில்வே அமைச்சரின் விளக்கம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • சினிமா மோகத்தைக் கைவிட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: மாணவர்களுக்குக் கிரண் ரிஜிஜூ அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.