மைனர்கள் எந்த நிலையாக இருந்தாலும், பெற்றோர் அவர்களை கடையில் விற்கப்படும் பொருளைப் போல நடத்தக்கூடாது

Date:

மைனர் குழந்தைகளை எந்த நிலையிலும் பெற்றோர் கடைகளில் விற்கப்படும் பொருட்களாகப் பார்க்கக் கூடாது; அவர்களின் உணர்ச்சிகளும் விருப்பங்களும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், கணவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 11 வயதான இரட்டை ஆண் குழந்தைகளை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கணவன்–மனைவி இருவரும் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தை அணைந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில், திங்கள் முதல் வெள்ளி வரை குழந்தைகள் தாயுடன் வசிக்கவும், வார இறுதியில் தந்தையுடன் இருக்கவும் முன்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், கணவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தார்.

மேல் முறையீட்டு மனுவுக்கான விசாரணையில், இரு குழந்தைகளும் தாயிடமே வாழ விருப்பம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினர். இதன் பேரில், குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்கவும், அவர்களின் கல்வி மற்றும் தேவையான அனைத்து செலவுகளையும் தந்தைச் சந்திக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மைனர் குழந்தைகளை பெற்றோர்கள் அல்லது நீதிமன்றங்கள் எவரும் பொருளாகக் கருதக் கூடாது; அவர்களின் உணர்வு, எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 69வது நினைவு நாள்: சென்னையில் பாஜக ஏற்பாடு செய்த மரியாதை பேரணி

அம்பேத்கரின் 69வது நினைவு நாள்: சென்னையில் பாஜக ஏற்பாடு செய்த மரியாதை...

கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை — 3 பேருக்கு குண்டர் சட்டம்

கோவை: கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை —...

ஹாரர் திரைப்படமான ‘இஷா’வின் முன்தோற்றக் காட்சி வெளியீடு!

ஹாரர் திரைப்படமான ‘இஷா’வின் முன்தோற்றக் காட்சி வெளியீடு! நடிகை ஹெபா படேல் முன்னணி...

இண்டிகோ விமான ரத்து: பயணிகள் பணத்தை மீண்டும் பெற முடியுமா? – விரிவான விளக்கம்

இண்டிகோ விமான ரத்து: பயணிகள் பணத்தை மீண்டும் பெற முடியுமா? –...