காசா மீது “உடனடி, சக்திவாய்ந்த தாக்குதல்” – நெதன்யாகு உத்தரவு
ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு பதிலடியாக, காசா பகுதியில் உடனடியாகவும் வலுவாகவும் தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் —
“பாதுகாப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு, காசா மீது பலத்த தாக்குதலை உடனடியாக முன்னெடுக்க நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்தது போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறுவதாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மற்றொரு கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஹமாஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.